வாணியம்பாடியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆயிரம் நபர்களுக்கு உணவு பொருட்களை வழங்கப்பட்டது
" alt="" aria-hidden="true" />
வாணியம்பாடியில் ஏழை, எளிய ஆயிரம் குடும்பத்திற்கு காங்கிரஸ் கட்சி சிறுபான்மை துறை சார்பில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.
கரோனா நோய் தொற்று பரவலை தடுக்க 21 நாட்கள் ஊரடங்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் காங்கிரஸ் சிறுபான்மை துறை சார்பில் ஏழை, எளிய கூலி தொழிலாளிகளின் ஆயிரம் குடும்பத்திற்கு காங்கிரஸ் கட்சி சிறுபான்மைத்துறை மாநிலத் தலைவர் அஸ்லாம் பாஷா அரிசி, பருப்பு, ரவை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வீடு, வீடாக சென்று வழங்கினார்.